வானிலை சீரடைந்த பின்பு அந்த விமானம், தாமதமாக சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வழக்கமாக அதிகாலை 5.35 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் காலை 7.35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் இந்த விமானம் நேற்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகி, காலை 11.30 மணியளவில் சென்னைக்கு வந்து, பகல் 1.30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விமானத்தில் சென்னையில் இருந்து செல்ல 285 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் இரவே, விமான தாமதம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்பட்டது. தகவல் கிடைக்காத பயணிகள் மற்றும் வெளியூர் பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். அவர்களுக்கு ஓட்டல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதானால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post லண்டனில் மோசமான வானிலை சென்னை புறப்பட்ட விமானம் அவசரமாக தரை இறங்கியது: 285 பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.