அதன் அடிப்படையில் நேற்று துறைமுகம் தொகுதி எம்எல்ஏவும், அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, 105 குடும்பத்தினருக்கு புதிதாக கட்டப்படும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தற்காலிக ஆணை வழங்கினார். மேலும் அவர்கள் வெளியே குடியிருக்க ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.24 ஆயிரம் வழங்கினார். இதையடுத்து அவர்கள் தங்களது வீடுகளை காலி செய்தனர். பின்னர், ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தங்கசாலை பகுதியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் 10 மாதம் கழித்து அவர்களுக்கு வீடு வழங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 50 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்திருந்த இந்தப் பகுதி தற்போது போக்குவரத்து பாதிப்பின்றி காட்சியளிக்கிறது.
The post நடைபாதையில் கட்டப்பட்ட 105 வீடுகள் அகற்றம்: மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.
