இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தரப்பில், திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. படப்பிடிப்பு காட்சிகள் 2020ம் ஆண்டே வெளியான போதும், தாமதமாக 2024ம் ஆண்டுதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில், இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார். படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது என்பதால் இது காப்புரிமை சட்டத்திற்கு பொருந்தும் எனவும், படத்தின் படப்பிடிப்பின் பெரும்பாலும் சென்னையில் தான் நடைபெற்றது எனவும், டிரெய்லர் மற்றும் படம் சென்னையில் தான் வெளியிடப்பட்டது எனவும் வாதிட்டார்.
இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், வொண்டர்பார் நிறுவனத்தின் தரப்பில் தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post நடிகர் தனுஷ் வழக்கு.. நயன்தாராவுக்கு ஆதரவாக நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.
