அந்த மனுவில், துப்பாக்கிச் சூட்டில் தனது கணவருக்கு இடது காலில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த குண்டு அகற்றப்பட்டது. காயம் முழுமையாக குணமடையாததால் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதியளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, பாம் சரவணனின் உடல் நிலை சீராக இருப்பதாக கூறி, ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், அவரது இடது காலில் உள்ள காயம் குணமடைந்து வருகிறது. வேண்டுமானால் பாம் சரவணனுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயார் என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
The post போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனின் உடல்நிலை சீராக உள்ளது: ஐகோர்ட்டில் ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.
