ஒரு பகுதியில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது, விரைவாக அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். திருவள்ளுவர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்கிறோம். வள்ளலாரையும், வள்ளுவரையும் நாங்கள் களவாடவில்லை திமுக தான் களவாடுகிறது. முக்கடல் சங்கமிக்கும் கடலில் வள்ளுவருக்கு சிலை நிறுவ ஆரம்பித்தது ஆர்எஸ்எஸ் தான் என்று வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார். வள்ளுவருக்கு காவி சாயம் பூசி, அவரை பாஜவினர் தான் அபகரிக்க நினைக்கின்றனர். கன்னியாகுமரியில் உள்ள சிறு குழந்தையை கேட்டால் கூட தெரியும் கலைஞர் தான் திருவள்ளுவர் சிலையை அமைத்தார் என்று. அது எப்படி வானதி சீனிவாசனுக்கு தெரியவில்லை அதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
The post வள்ளுவருக்கு சிலை அமைத்து புகழ் சேர்த்தது கலைஞர் என சிறு குழந்தைக்கு தெரிந்த விஷயம் கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாதா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.