சிறுவன் காணாமல் போன புகார் குறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் காணாமல் போன பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுவனை அருகில் வசிக்கும் பெண் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் பதுங்கி இருந்த ஊருக்கு சென்று சிறுவனை மீட்டு இளம்பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வினோதினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது appeared first on Dinakaran.