இதையடுத்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அசோகன் (24), பிரகாஷ் (25), சுபாஷ் (24) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய இருந்த நிலையில், மூன்று பேரும் காப்பகத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டனர். போலீசார், தனிப்படை அமைத்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், காப்பக நிர்வாகிகள், ஊழியர்கள், தங்கி இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காப்பகத்தில் சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் மீது தாக்குதல்: 3 ஊழியர்கள் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.
