முன்பணமாக கொடுத்த 45 லட்சம் ரூபாயை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்தரன், படம் ஜனவரி 24ம் தேதி வெளியிடப்பட மாட்டாது. 45 லட்சம் ரூபாயை திரும்ப அளிப்பது குறித்து தயாரிப்பாளரிடம் கருத்து பெற்று தெரிவிக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து, ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக படம் வெளியிடப்பட மாட்டாது என்ற தயாரிப்பாளர் தரப்பின் உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘படைத்தலைவன்’ படம் ஜன.24 முன்பு வெளிவராது: ஐகோர்டில் தயாரிப்பாளர் உத்தரவாதம் appeared first on Dinakaran.
