சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 15 புதிய வளைய சுற்று தர அமைப்பு கருவிகளை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு (RMU) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள வி.ஆர்.பிள்ளை தெருவில் இன்று (10.01.2022) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஆலங்காத்தான் தெரு, தேவராஜ் முதலி தெரு, ஜான் ஜானி கான் தெரு I, ஜான் ஜானி கான் தெரு II, தலையாரி தெரு, தெற்கு கூவம் ரோடு, கஜா தெரு, எல்லப்பன் தெரு, சி.பி.எம்.தெரு, காக்ஸ் கொயர், சுவாமி நாயக்கன் தெரு, லாக் நகர் I, லாக்நகர் II, பார்த்தசாரதி தெரு ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 15 கருவிகளை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் இத்தகைய கருவிகள் 108 எண்ணம் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவற்றில் இதுவரை 27 எண்ணம் வளைய சுற்றுத்தர கருவிகள் (RMU) சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்/பகிர்மானம் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.இந்த வளைய சுற்றுத்தர கருவி அமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் விபத்தினை தவிர்க்க முடியும். மேலும், ஒவ்வொரு வளைய சுற்றுத்தர கருவியும் குறைந்தபட்சம் இரு மின்வழிப் பாதைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஏதேனும் ஒரு மின்பாதையில் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு மின்வழிப் பாதையின் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். இதனால் பொதுமக்களுக்கு மின்தடையினால் ஏற்படும் அசௌகரியங்கள் வெகுவாக குறைக்கப்படும். மேலும், இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மின் வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள் அனைத்தும் SCADA சிஸ்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் தலைமையிடத்தில் இருந்தே இந்த கருவியினை இயக்க முடியும். இதனால் மின்சாரம் எடுத்துச் செல்லும் கேபிள்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலும் கூட அதனை உடனே கண்டறிந்து துரிதமாக சரி செய்யவும் முடியும்….

The post சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 15 புதிய வளைய சுற்று தர அமைப்பு கருவிகளை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: