அதையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொட்டும் மழையிலும் மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை தொடங்கி தொடர்ந்து மழை நீடித்த போதும், வழக்கமான உற்சாகத்துடன் விழா நடந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். மகா தீபத்தை முன்னிட்டு, கோயில் கோபுரம் மற்றும் கோயில் வளாகம் மின்விளக்குகளால் ஜொலிப்பதால் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.