அப்போது கைதிகளின் அறைகளிலிருந்து 5 செல்போன், கஞ்சா மற்றும் அதிக அளவில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் சிறைத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். கடுமையான பாதுகாப்பும் கெடுபிடிகளும் உள்ள சிறைக்குள் செல்போன்கள் கஞ்சா மற்றும் பணம் எப்படி வந்தது என்று பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பூந்தமல்லியில் உள்ள சிறை வார்டன்கள், ஜெயிலர்கள் மற்றும் போலீசாரிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்தில் போலீசார் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, பூந்தமல்லி தனி கிளை சிறை துணை ஜெயிலர் செல்வராஜ், உதவி ஜெய்லர் ஜேம்ஸ் பிரிட்டோ, தலைமை காவலர் உதயகுமார், மாரி செல்வம் உள்ளிட்ட 5 பேரை சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிறை கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல்: துணை ஜெயிலர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.