இதனிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆவின் பால் தட்டுபாடு ஏற்படாமல் இருக்கும் வகையில், ஆவின் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சேலம் ஆவினில் இருந்து, நேற்று முன்தினம் 15 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. நேற்றும் 15 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் நிலைமை சீரடையும் வரை, சேலம் ஆவினில் இருந்து பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சேலம் ஆவினில் இருந்து சென்னைக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.
