தொடர் மழை மற்றும் புயல் பாதிப்புகள் தொடரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை வேகப்படுத்த வேண்டும் குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் தொடர் மழையால் பயிர்கள் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி பெருமளவு பாதித்துள்ளது. சில இடங்களில் 80% வரை பாதிப்பு இருக்கிறது.
மீனவர்கள், புயல் காரணமாக வலைகள் அறுந்தும், படகுகள் சேதமாகியும் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். வீடுகள் உடைமைகளை இழந்திருப்பதுடன், வருமான வாய்ப்புகளும் அற்றுப் போயுள்ளார்கள். 16வது நிதி ஆணையத்தின் முன் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கையை ஏற்று, காலநிலை சார்ந்த அளவுகோலையும் நிதிப் பங்கீட்டில் இணைத்திட வேண்டும்.
The post கடலோர மாவட்டங்கள் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
