சைரன் படத்தில் சிறைக் கைதியாக நடிக்கும் ஜெயம் ரவி

சென்னை: ‘இறைவன்’, ‘சைரன்’, ராஜேஷ்.எம் இயக்கும் படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்நிலையில் ‘சைரன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கி, ஜூலை இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். முதல் முறையாக பல்வேறு வித்தியாசமான கெட்டப்புகளில் ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்துள்ளாராம்.

படத்தில் அவர் சிறைக்கைதி கேரக்டரில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில், ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தை புதியவர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவில் ஒரு ரூபன் படத்தொகுப்பில் படம் உருவாகி வருகிறது.

The post சைரன் படத்தில் சிறைக் கைதியாக நடிக்கும் ஜெயம் ரவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: