பெங்களூரு கட்டிட விபத்தில் பலி 2 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி: முதல்வர்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த 22ம் தேதி பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டிடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post பெங்களூரு கட்டிட விபத்தில் பலி 2 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி: முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: