கருணை அடிப்படையில் 2 பேருக்கு அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசு, தலைமை செயலகம், செய்தி மக்கள் தொடர்பு துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த எஸ்.அன்பழகன் கடந்த 5.10.2022 அன்று திருநெல்வேலி அரசு பொருட்காட்சியில் பணியில் இருக்கும்போது, இயற்கை எய்தினார். அவருடைய சட்டப்படியான வாரிசுதாரர்களில் ஒருவரான அவரது இளைய சகோதரர் எஸ்.குணாநிதிக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் நேற்று பணி நியமன ஆணையை வழங்கினார். அதேபோல, சென்னை ராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபத்தில் தேர்வு நிலை தோட்டப் பணியாளராக பணிபுரிந்து வந்த ஜி.வரலட்சுமி கடந்த 4.1.2024 அன்று இயற்கை எய்தியதால், அவருடைய ஒரே மகனான டி.வி.பரமேஸ்வரராவுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி நியமன அமைச்சர் நேற்று வழங்கினார். இந்நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் அன்புசோழன், செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கருணை அடிப்படையில் 2 பேருக்கு அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: