இந்திய – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வகுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: மீனவர்கள் நலனுக்கான இந்திய, இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் வரும் 29ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், அதில் தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை. இரு தரப்பு மீனவர்களும் சிக்கலின்றி மீன் பிடிக்க என்ன வழி என்பதை வரும் 29ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் ஆராய வேண்டும். மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவான திட்டம் கூட்டத்தில் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இந்திய – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வகுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: