மணல் கடத்திய லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில், அக்.24: வெள்ளக்கோவில் பகுதியில் சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் வெள்ளக்கோவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரியாண்டிவலசு அருகே ஒரு டிப்பர் லாரியில் கிராவல் மண் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். இதில், லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். பின்னர், லாரியை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மணல் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: