சென்னை: அதிமுக 53வது ஆண்டு தொடக்க நாள் விழாவை முன்னிட்டு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 17ம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாக பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில், காஞ்சிபுரத்தில் வரும் 26ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.