மெரினா கடற்கரையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் ‘காதல் மன்னன்’ சந்திரமோகன் தினம் ஒரு தோழிகளுடன் தனிமையில் சந்திப்பு

* கடற்கரை மணல் பரப்பில் போர்வை விரித்து மடியில் தலைவைத்து, காதலி ஊட்டிவிட்டால் தான் சாப்பிடுவாராம், பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்

சென்னை: போலீசாரை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சந்திரமோகன் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் காதல் மன்னன் சந்திரமோகன் மெரினா கடற்கரையில் போர்வையை விரித்து ஒவ்வொரு நாளும் ஒரு தோழிகளுடன் கறி விருந்துகளுடன் தனிமையில் இருந்து வந்தது, விசாரணையின் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மெரினா லூப் சாலையில் கடந்த 21ம் தேதி கள்ளக்காதல் ஜோடி ஒன்று ரோந்து போலீசாரை இழிவாகவும், ஆபாசமாக பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட காவலர் சிலம்பரசன், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து வேளச்சேரி அருகே உள்ள தங்கும் விடுதியில் இருந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமியை அதிரடியாக போலீசார் ேநற்று கைது செய்தனர். போலீசார் கைது செய்த பிறகு, சந்திரமோகன் தான் செய்தது தவறுதான் என்று தனியாக வீடியோ ஒன்று வெளியிட்டு பகிரங்கமாக போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார்.

இருந்தாலும் போலீசார் சந்திரமோகன் மற்றும் அவரது காதலி தனலட்சுமி ஆகியோரை நேற்று நள்ளிரவு சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் போலீசார் நேற்று அதிகாலை புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சந்திரமோகன் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் வெவ்வேறு பெண்களுடன் ஒன்றாக சுற்றும் வீடியோ காட்சிகள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கைது செய்யப்பட்ட சந்திரமோகனுக்கு மனைவி மோகனா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மகன் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருவதால், சந்திரமோகன் வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் வெளியே சுற்றுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த நாட்களில்தான் சந்திரமோகன் தனது பெண் தோழிகளுடன் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து நிலா வெளிச்சத்தில் ஆட்டுக்கறி, மீன் வறுவல், பிரியாணி மற்றும் மது விருந்துகளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. தோழியின் மடியில் தலைவைத்து சந்திரமோகன் படுத்தப்படி இருக்க..

குழந்தைகள் போல் அவரது தோழி உணவை ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவார் என்றும், இல்லையென்றால் உணவு வேண்டாம் என்று அடம் பிடிப்பார் என்றும், தோழி தனலட்சுமியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தனலட்சுமி போல் சந்திரமோகனுக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதும், இதற்காக அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த வகையில்தான், இரவு நேரத்தில் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், சந்திரமோகனை கடந்த ஒரு மாதத்திற்கு மேல் கண்காணித்து, அவரை கண்டித்தும் வந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு பெண்களுடன் கணவன் மனைவி போன்று மணல் பரப்பில் போர்வைகளை விரித்து கறி மற்றும் மது விருந்துகளுடன் கொண்டாடுவது சரியில்லை என்று எச்சரித்துள்ளனர். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை அவர் ஒருநாளும் கடைப்பிடிக்காமல் தான் பெரிய இடத்து ஆள் போல் செயல்பட்டு வந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு இதே போன்று காதல் மன்னன் சந்திரமோகன் தனது பெண் தோழியுடன் பட்டினப்பாக்கம் கடல் மணல்பரப்பில் போர்வையை விரித்து கறி விருந்துகளுடன் மது போதையில் தோழியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருந்துள்ளார். இதை பார்த்த ரோந்து போலீசார் இது போன்று ஒவ்வொரு நாளும் அநாகரிகமாக செயல்படுவது சரியில்லை. உடனே இங்கிருந்து கிளம்பி செல்லுங்கள் என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால் போதையில் இருந்த சந்திரமோகன், ஆத்திரமடைந்து தனது போனில் போலீசாரை வீடியோ எடுத்துள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் தங்களது போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

* கார் புரோக்கர் களி தின்னும் கதை….
கைது செய்யப்பட்ட சந்திரமோகன் தனது மற்றொரு தோழியுடன் 2 நாட்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் நள்ளிரவு தகராறில் ஈடுபட்ட வீடியோ கட்சிகளின் விவரங்கள் வருமாறு: போதையில் இருந்த சந்திரமோகன், ‘இங்கே உட்கார கூடாது என்று போர்டு இருக்கா…’ என போலீசை பார்த்து கேட்கிறார்.

அதற்கு போலீசார், ‘ஏங்க இரவு 1 மணிக்கு வந்து இப்படி உட்கார்ந்து இருப்பீங்களா…. சொல்லுங்க…’ என்றதும், ‘பாங்காக்ல எல்லாம் நைட் பூரா இருக்கலாம்’ என்கிறார் சந்திரமோகன். பிறகு போலீசை பார்த்து, ‘தம்பி விஜயகாந்த் மாதிரி இருக்கீங்க. நீ வீடியோ எடு.. யாரை வேணாலும் கூட்டிட்டு வா… என்ன நீ உள்ளே வச்சிட்டன்னா… நீ ஷார்ப் யா… உன்னால் முடிஞ்சத பார்’ என போலீசாரை ஏக வசனத்தில் பேசுகிறார்.

இந்த வீடியோ தான் தற்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் மெரினா பீச்சில் கள்ளக் காதலிகளுடன் கூத்தடித்த கார் புரோக்கர் நிலைமை இப்போது சிறையில் களி தின்னும் அளவுக்கு கொண்டு போய் விட்டது, அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மெரினா கடற்கரையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் ‘காதல் மன்னன்’ சந்திரமோகன் தினம் ஒரு தோழிகளுடன் தனிமையில் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: