பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு: 1,500 இடங்கள் நிரம்பின

சென்னை: தமிழகத்தில் உள்ள பி.எட்., கல்லூரிகளில் இளநிலை பி.எட். படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், மனை அறிவியல், பொருளாதாரம், வணிகவியல் என 13 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இவை கலந்தாய்வு மூலம் நிரப்பபடுகின்றன. ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 26ம் தேதி நிறைவடைந்தது.

மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,187 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். கன மழையால் 15 மற்றும் 16ம் தேதி நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு மற்றும் அக்.21, 22 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி கலந்தாய்வும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கலந்தாய்வு மூலம் அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 600 இடங்களும் என மொத்தம் 1,500 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெர்வித்துள்ளனர். முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வருகிற 28ம் தேதி வகுப்புகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு: 1,500 இடங்கள் நிரம்பின appeared first on Dinakaran.

Related Stories: