அப்போது, ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதால் செவிலியர்களுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டத்தில் கூறப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகைகளை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒப்பந்த பணி நியமன நிபந்தனைகளைக் கூறி மகப்பேறு சலுகைகளை மறுப்பதை ஏற்க முடியாது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் மகப்பேறு சலுகை கோரி அளித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை மூன்று மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு பலன்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.