மனைவிக்கு தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம்: போலீசார் விசாரணை

சென்னை: மனைவிக்கு தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவகங்களுக்கு சென்று உணவு தொடர்பான பல்வேறு வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூபர் இர்ஃபான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். லைக்குகளுக்காக பல்வேறு விடீயோக்களை வெளியிட்டு சிக்கி கொண்ட இர்ஃபான் மேலும் ஒரு சர்ச்சையான விவகாரத்தில் சிக்கி காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இர்ஃபான் மனைவி கடந்த ஜூலை மாதம் குழந்தை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த விவகாரம் மருத்துவ துறையில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இதே போன்று குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான இர்ஃபான் அதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகும் தொடர்ந்து மருத்துவ விதிகளை மீறி பல்வேறு செயல்களில் ஈடுபட்டு அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டதால் தற்போது 2 வது முறையாக சிக்கியுள்ளார். தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவத்துறை தரப்பிலிருந்து கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையிடமும், தொப்புள் கொடியை வெட்டுவதற்கு அனுமதித்த மருத்துவர் நிவேதிதா உள்ளிட்டோர் தொடர்பாக மருத்துவத்துறை இயக்குனர் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

மருத்துவத்துறை விதிகளை மீறி செயல்படும் இர்ஃபான் மீது காவல்துறையிலும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றைய தினம் விசாரணையில் ஈடுபட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவம் நிகழ்ந்த தனியார் மருத்துவமனை இருக்கும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத்துறையின் ஜாயின் டெரக்ட்டர் இளங்கோவன் புகார் அளித்தார். யூடியூபர் இர்பான் மீதும் இந்த நிகழ்விற்கு அனுமதி அளித்த மருத்துவர் நிவேதிதா மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவம் தொடர்பான ஆவணங்களை மருத்துவத்துறை தரப்பிலிருந்து பெறப்பட்டு காவல்துறை தற்போது விசாரணையை தொடங்கி உள்ளது. மருத்துவ விதிகளை மீறி செயல்பட்ட காரணத்தினால் விவரங்களை தெரிந்துகொண்டு ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய போலீசார் திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், ஆபரேசன் தியேட்டரில் அன்று பணியில் இருந்தவர்களின் விவரங்களை செம்மஞ்சேரி போலீசார் சேகரித்துள்ளனர்.

The post மனைவிக்கு தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: