மணிப்பூரில் மீண்டும் வன்முறை

இம்பால்: மணிப்பூரில் இந்த மாத தொடக்கத்தில் சற்று அமைதி திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா கிராமத்தில் காவல் நிலையம் அருகேவுள்ள கிராமத்தின் மீது நேற்று முன்தினம் அதிகாலை போராட்டக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வௌியாகவில்லை. வன்முறையை தொடர்ந்து கிராமத்தில் உள்ள முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கூடுதல் பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை appeared first on Dinakaran.

Related Stories: