சிவன் குறித்து சர்ச்சை வார்த்தை காங். எம்எல்ஏ மீது வழக்கு

இந்தூர்: சிவன் குறித்து மத்தியப்பிரதேச மாநிலம், ஷியோப்பூர் காங்கிரஸ் எம்எல்ஏவான பாபு ஜண்டேல் பேசியதாக சமூக ஊடகங்களில் வந்த சர்ச்சைக்குரிய வீடியோவை மேற்கோள்காட்டி விஷ்வ இந்து பரிஷத்தின் சட்டப்பிரிவு கன்வீனர் அனில் நாயுடு துகோகஞ்ச் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

காங்கிரஸ் எம்எல்ஏ, சிவபெருமான் குறித்து சர்ச்சை கருத்தை கூறியதாகவும், இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். புகாரின்பேரில் காங்கிரஸ் எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே எம்எல்ஏ மீது ஷியோப்பூர் காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சிவன் குறித்து சர்ச்சை வார்த்தை காங். எம்எல்ஏ மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: