வாலிபர் அடித்து கொலை

அம்பத்தூர், அக்.19: அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை சவுத் காலனி சந்திப்பு அருகே நேற்று முன்தினம் ஒரு வாலிபர் நடந்து சென்றபோது, மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தராததால், சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். தகவலறிந்த ஐ.சி.எப் போலீசார் வாலிபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருததுவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையான வாலிபர் யார், அவரை அடித்து கொன்றவர்கள் யார் என சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்துகின்றனர்.

The post வாலிபர் அடித்து கொலை appeared first on Dinakaran.

Related Stories: