வேளச்சேரி மயான பூமி நவ.12 வரை செயல்படாது

சென்னை, அக்.19: அடையாறு மண்டலம், 172வது வார்டு, வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகில் அமைந்துள்ள வேளச்சேரி இந்து மயான எரிவாயு தகனமேடையில் பழுது சரிபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், 12.09.2024 முதல் ஒரு மாத காலத்திற்கு மேற்கண்ட மயானபூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, மேற்கண்ட மயானபூமியில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வருகின்ற நவம்பர் 12ம் தேதி வரை இயங்காது. எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் எரிவாயு மயானபூமி, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட புழுதிவாக்கம் எரிவாயு மயானபூமி மற்றும் 178வது வார்டுக்குட்பட்ட வேளச்சேரி தரமணி சாலையில் அமைந்துள்ள பாரதி நகர் எரிவாயு மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம், என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

The post வேளச்சேரி மயான பூமி நவ.12 வரை செயல்படாது appeared first on Dinakaran.

Related Stories: