பேசின்பாலம் ரயில் நிலைய லிப்ட்டில் பெண்கள் உள்பட 9 பேர் சிக்கியதால் பரபரப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

 

பெரம்பூர், அக்.16: பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது (40). பார்வை இல்லாத இவர் ஜூவல்லரி பாக்ஸ் தயாரிக்கும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருவதற்காக அங்கிருந்த லிப்ட்டை பயன்படுத்தினார். இவருடன் காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் விற்பனை செய்யும் பெண்களான அஸ்வினி, கன்னியம்மாள், லலிதா, லதா உள்ளிட்ட 9 பேர் லிப்ட்டில் ஏறி உள்ளனர்.

சுமார் 9 பேர் லிப்ட்டில் ஏறி லிப்ட்டை ஆன் செய்த போது லிப்ட் பாதி தொலைவில் சென்று நின்றது. இதனால் அனைவரும் கூச்சலிட்டனர். லிப்ட்டில் இருந்த நூர் முகமது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பிறகு வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து லிப்ட் மெக்கானிக் கணபதி என்பவரை வரவழைத்து பத்திரமாக லிப்ட்டில் இருந்த ஒன்பது பேரையும் மீட்டனர்.

The post பேசின்பாலம் ரயில் நிலைய லிப்ட்டில் பெண்கள் உள்பட 9 பேர் சிக்கியதால் பரபரப்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: