சுதர்சன் இரட்டை சதம்: தமிழ்நாடு 379/1

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தி, டெல்லி அணிக்கு எதிராக தமிழ்நாடு முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 379 ரன் குவித்துள்ளது.அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஹிம்மத் சிங் முதலில் பந்துவீச முடிவு செய்தார். சாய் சுதர்சன் – நாராயண் ஜெகதீசன் இணைந்து தமிழ்நாடு இன்னிங்சை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 168 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

ஜெகதீசன் 65 ரன் (101 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சைனி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து சாய் சுதர்சன் – வாஷிங்டன் சுந்தர் இணைந்து டெல்லி பந்துவீச்சை பதம் பார்த்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு ஒரு விக்கெட் இழப்புக்கு 379 ரன் குவித்துள்ளது. சுதர்சன் 202 ரன் (259 பந்து, 23 பவுண்டரி, 1 சிக்சர்), வாஷிங்டன் 96 ரன்னுடன் (170 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post சுதர்சன் இரட்டை சதம்: தமிழ்நாடு 379/1 appeared first on Dinakaran.

Related Stories: