குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மணலி விஸ்வநாததாஸ் நகர் பொதுமக்கள் கடும் தவிப்பு: திமுகவினர் நிவாரண உதவி வழங்கினர்


திருவொற்றியூர்: சென்னை மாதவரம் தொகுதி மணலி மண்டலம் 17வது வார்டு விஸ்வநாததாஸ் நகரில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தவிக்கின்றனர். இதனால் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். இங்குள்ள கால்வாய் அடைத்துள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தெருக்களில் தேங்கியுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை உடனடியாக அகற்றவேண்டும் என்று பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட விஸ்வநாததாஸ் நகரில் மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமையில், திமுக நிர்வாகிகள் உணவு மற்றும் பிரட் ஆகியவற்றை வழங்கினர். மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று உறதி அளித்ததுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

The post குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மணலி விஸ்வநாததாஸ் நகர் பொதுமக்கள் கடும் தவிப்பு: திமுகவினர் நிவாரண உதவி வழங்கினர் appeared first on Dinakaran.

Related Stories: