சென்னையின் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை : சென்னையின் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்தது. மீதமுள்ள 103 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களில் 54 மரங்கள் விழுந்த நிலையில் அவைகள் முழுமையாக அகற்றம் செய்யப்பட்டன. மொத்தம் 300 நிவாரண முகாம்களில், 27 இடங்களில் 944 பேர் தங்கியுள்ளனர்.கடந்த 2 நாட்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 7.18 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது,”இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post சென்னையின் அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: