மேற்கூரை இடிந்து விழுந்து உயிர் தப்பிய 3 சிறுவர்கள்

 

செங்கல்பட்டு, அக்.16: செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கருநீலம் ஊராட்சியில் வசித்து வருபவர் தனசேகர் கலைச்செல்வி தம்பதியினர் இவர்களின் 3 பிள்ளைகளும் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிற்குளேயே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக மழையினால் சேதமடைந்து வீட்டின் வரவேற்பரை மேற்கூரை திடீரென இடிந்து விளையாடி கொண்டிருந்த 3 குழந்தைகள் மீதும் விழுந்தது. இந்த விபத்தின்போது லேசான சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக மூன்று பேரும் உயிர்த்தபினர்.

The post மேற்கூரை இடிந்து விழுந்து உயிர் தப்பிய 3 சிறுவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: