இந்த நிலையில் இந்த விதியை நீக்க வேண்டும் என பல அணி நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதில் இம்பேக்ட் விதி மூலம் இந்திய அணிக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆல்ரவுண்டர்கள் கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு இருப்பதாக ரோகித் குற்றம் சாட்டி உள்ளார். உதாரணத்திற்கு வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை பயன்படுத்தும் ஐபிஎல் அணிகள் அவருடைய பேட்டிங்கை பயன்படுத்தாமல் போய்விடுகிறது. இதனால் ஆல் ரவுண்டர்கள் தங்கள் திறமையை முழுவதுமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இம்பேக்ட் விதி தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் இம்பேக்ட் விதி வரும் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தொடரும் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு நடைபெறும் சையது முஸ்தாக் அலி தொடரில் இம்பேக்ட் விதியை ரத்து செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் தொடரை விட சையது முஸ்தாக் அலி தொடரில் பல ஆல்ரவுண்டர்கள் உருவாக வாய்ப்பு இருப்பதால், ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவம் கருதி பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் ஐபிஎல் 2026ம் ஆண்டு சீசனில் இம்பேக்ட் விதி இருக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
The post ஐபிஎல் தொடரிலும் ரத்து செய்ய ரோகித், கோஹ்லி வலியுறுத்தல்; சையது முஸ்தாக் அலி தொடரில் இம்பேக்ட் விதி ரத்து: பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.