ரூ.1,000 பரிமாற்றம் செய்யப்பட்டு, பணியை முடித்த பிறகு ரூ.1,500 திரும்பக் கிடைத்தது. மீண்டும் ரூ.3 ஆயிரம் முதலீடு செய்தார். கமிஷன் உட்பட ரூ.4,300 மாற்றப்பட்டது. அதிக பணத்தை மாற்றினால் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்த அவர் ரூ.7,14,060 பல்வேறு வங்கி கணக்குகளுக்கு படிப்படியாக மாற்றியுள்ளார். இதில் ரூ.5,800 மட்டும் அவரிடம் திருப்பி கொடுத்துள்ளனர். பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post ரூ.3 ஆயிரம் கட்டினால் ரூ.4,300 ஆசைவார்த்தை கூறி ரூ.7 லட்சம் மோசடி appeared first on Dinakaran.