சென்னையில் 34 விமானங்கள் தாமதம்..!!

சென்னை: சென்னையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 34 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. நிர்வாக காரணங்களால் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக விமானங்கள் இயக்கப்பட்டது. சிங்கப்பூர், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 5 சர்வதேச விமானங்கள், 29 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக சென்றன. கோவை, திருச்சி, மதுரையில் கனமழை பெய்ததால் உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. கனமழை, காற்றின் வேகத்தை பொறுத்து விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும் என விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் 34 விமானங்கள் தாமதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: