வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வழுப்பெற்று வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேற்கு -வடமேற்கு திசையை நோக்கி வடதமிழ்நாட்டை நோக்கி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக 16-ம் தேதி தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 21 செ.மீ.க்கும் அதிக மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் 16-ம் தேதி சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் 14, 15, 17, ஆகிய 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் 12 முதல் 20 வரை மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது என்பதால் 14, 15, 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: