மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து: பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மதுரை: மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். கனமழையால் வைகை அணை 55 அடியை எட்டிய நிலையில் 969 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் நீர்திறப்புடன் மழைநீரும் சேர்ந்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து: பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: