திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 4ம் தேதி தொடங்கிய வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் முடிவடைந்தது. பிரம்மோற்சவ நாட்களில் மொத்தம் 6.74 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ரூ.28.72 கோடியை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

30 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனையானது. பிரம்மோற்சவம் முடிந்த நிலையில், நேற்றும் பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியதால் பேட்டகங்கையம்மன் கோயில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.

Related Stories: