கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப்லைன் பழுது என்று தவறான தகவல் பரப்புவதா?: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

சென்னை: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப்லைன் பழுது என்று தவறான தகவல் பரப்புவதா? என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை மீட்டு பூங்காவை உருவாக்கினால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வருகிறது?. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. ஜிப்லைனில் பழுதடைவதற்கு ஒன்றுமில்லை, ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அறிக்கை தவறானது என்று கூறியுள்ளார்.

 

The post கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப்லைன் பழுது என்று தவறான தகவல் பரப்புவதா?: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! appeared first on Dinakaran.

Related Stories: