முரசொலி செல்வம் மறைவு: ஜவாஹிருல்லா, ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். எழுத்துத்துறை மட்டுமின்றி, திரைத்துறையிலும் தடம் பதித்தவர். திராவிட சிந்தனையை பரப்புவதில் பெரும் முனைப்பு காட்டியவர் என்றும் தெரிவித்தார். முரசொலி செல்வம் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் என ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலி செல்வத்தை இழந்துவாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்களையும் தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: ஜவாஹிருல்லா, ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: