நாகை மீனவர்களை தாக்கி மீன்வலை, தொழில் நுட்பசாதனங்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

நாகை: செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் கடற்படையினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஒன்றிய அரசு ஊழிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரும் பலமுறை வலியுறுத்தி கடிதங்களை எழுதி வருகிறார். இருப்பினும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து, 8 ஆம் தேதி ஏராளமான மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர். ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராஜ்குமார் உள்ளிட்ட 5 நபர்கள் புதன்கிழணை இரவு கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 20 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.

அவர்கள் நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கி சுமார் 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1 ஜிபிஎஸ் 1, டீசல் சுமார் 100 லிட்டர் மற்றும் ரேசன் பொருட்களை பறித்துச் சென்று விட்டனர். இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலைகளை பறித்து சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 4 பைபர் படகில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரண பொருட்களை கடற்கொள்ளையர்கள் அபகரித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோடியக்கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் மீனவர்களிடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது.

The post நாகை மீனவர்களை தாக்கி மீன்வலை, தொழில் நுட்பசாதனங்கள் கொள்ளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: