மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 2 பணியிடங்கள் விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள்

நாகர்கோவில், அக்.9: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அக்டோபர் 25க்குள் அளிக்க வேண்டும். புறத்தொடர்பு பணியாளர் பணிக்கு மாத தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்து 592. பணியிடம் ஒன்று. கல்வித்தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) ஒரு பணியிடம், மாத தொகுப்பூதியம் ரூ.27 ஆயிரத்து 804. கல்வித்தகுதி முதுகலை பட்டம் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இரு பதவிகளுக்கும் வயது 1.10.2024 அன்று 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மாதிரி விண்ணப்ப படிவம் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக வலைதளத்தில் ( www.kanniyakumari.nic.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியுள்ளவர்கள் புகைப்படத்துடன் அக்டோபர் 25 மாலை 5.30க்குள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து, ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகர்கோவில்- 629001’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் 2 பணியிடங்கள் விண்ணப்பிக்க அக்.25 கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: