வங்கக்கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11ம் தேதி வரை ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நிலை கொண்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு -தென் மேற்கு வங்கக் கடல் பகுதகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

அதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 8, 9, 10 மற்றும் 11ம் தேதிகளில் இதேநிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

 

The post வங்கக்கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: