நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (29ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நாளை (29ம்தேதி), காலை 11 மணியளவில், கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில், மாவட்டத்தை சேர்ந்த  விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், ட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது….

The post நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: