10 ஆண்டுகளாக செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை.. கைதாகி 15 மாதங்களுக்கு பிறகு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

2014: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

2015: தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை.

2016: உயர்நீதிமன்றத்தில் வழக்கு – செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்தது.

2019: அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன் அனுப்பியது. அதனை ரத்து செய்த உயர்நீதிமன்றம்.

2021: திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் செந்தில் பாலாஜி. சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.

2022: தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.

2023 மே: இந்த வழக்குகளை 2 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2023 ஜூன் 13: செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2023 ஜூன் 14: செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில், ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தொடர்ந்தார். அவருக்கு நீதிமன்றக் காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.

2024 ஆகஸ்ட் 8: செந்தில்பாலாஜி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

2024 ஆகஸ்ட் 20: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

2024 செப்டம்பே 26: 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

The post 10 ஆண்டுகளாக செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை.. கைதாகி 15 மாதங்களுக்கு பிறகு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: