இரண்டாம் கட்ட ஆக்கிரிமிப்பு அகற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

கோவை, செப். 26: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட (கரும்புக்கடை) சாரமேடு சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால், 15 அடி சாலையாக கடந்த 50 கால ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகினர். ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். ஆக்கிரமிப்பு பகுதியை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் உடனடியாக ஆக்கிரமிப்பை மூன்று கட்டமாக அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையின் நேற்று முதற்கட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதன்படி, சாலையின் இருபுறமும் 660 அடி நீளத்திலுள்ள 27 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

இதனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் தற்போது சாலையின் அகலம் 45ல் இருந்து 50 அடி அகலமாக உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இச்சாலையானது பொள்ளாச்சி சாலையையும், நஞ்சுண்டபுரம் சாலையையும் இணைக்கும் முக்கிய பிரதான சாலையாக அமையும். இரண்டாம் கட்ட ஆக்கிரிமிப்பு அகற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

The post இரண்டாம் கட்ட ஆக்கிரிமிப்பு அகற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: