துறையூர் ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானியங்கள், உணவுத் திருவிழா

 

துறையூர், செப்.25: துறையூர் ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானியங்கள் மற்றும் உணவுத் திருவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறையூர் ஒன்றிய பிடிஓ நிஜாஸ்டன் ஜோ தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா மோகன்தாஸ் முன்னிலை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். ஆரோக்கியத்திற்கும் உதவும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்க்கக் கூடாது. புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும்.

துறையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 67 மகளிர் சுய உதவிக் குழுவினர் சிறுதானியங்களையும், சிறுதானிய உணவுகளையும் செய்து காட்சிப்படுத்தினர். கண்காட்சியை ஒன்றிய அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டினை வட்டார இயக்க மேலாளர் சுமதி தலைமையில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கோமதி, சுபா, கல்பனா, பிரேமா, ராஜேஸ்வரி, சுஜா செய்தனர்.

The post துறையூர் ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானியங்கள், உணவுத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: