காவல் நிலையம் அருகே தீவிபத்து வாகனங்கள் எரிந்து நாசம்

அம்பத்தூர்: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே, பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 75க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று காலை 7.30 மணிக்கு அங்கிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் திடீரென தீப்பிடித்து எறிந்தது. காற்றில் தீ பரவி, அருகில் இருந்த 4 இருசக்கர வாகனங்களுக்கும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வாகனம் வருவதற்குள், அம்பத்தூர் போலீசார் தண்ணீர் லாரி வரவழைத்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், 5 இருசக்கர வாகனங்களும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

The post காவல் நிலையம் அருகே தீவிபத்து வாகனங்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: