இதில், திருவேற்காடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த கோலப்போட்டியில், வாக்காளர் வலிமை தேசத்தின் பெருமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, என் வாக்கு என் உரிமை, மாற்றுத்திறனாளிகளை 100 சதவீதம் வாக்களிக்க செய்தல் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய, ரங்கோலி கோலங்கள் வரைந்திருந்தனர். இந்த போட்டிகளை நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகர மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கோலங்களை வரைந்த மகளிர் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் வழங்கினர்.
The post வாக்காளர் விழிப்புணர்வு மெகா கோலப் போட்டி appeared first on Dinakaran.