நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த லோடு ஆட்டோ அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார் குடியாத்தம் அருகே

 

குடியாத்தம், செப்.11: குடியாத்தம் அருகே நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த லோடு ஆட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் அடுத்த உள்ளி கூட்ரோடு வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு லோடு ஆட்டோவை தர்மராஜன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். அப்போது, ஆட்டோவின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்து மளமளவென ஆட்டோ முழுவதும் பரவியது.

இதனை கவனித்த தர்மராஜன் உடனடியாக ஆட்டோவை நிறுத்தி கீழே இறங்கி விட்டு குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்
சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் லோடு ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

The post நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த லோடு ஆட்டோ அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார் குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: